மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில் வேலை; 212 காலியிடங்கள்; விண்ணப்பம் முடியும் தேதி 31 ஜனவரி 2025
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில் மேற்பார்வையாளர், இளநிலை உதவியாளர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன், விண்ணப்பதாரர்கள் சிபிஎஸ்இ குரூப் பி & சி 2025 அறிவிப்பை கவனமாகப் படித்து அவர்களின் தகுதியை உறுதி செய்ய வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் சிபிஎஸ்இ குரூப் பி & சி 2025 முடிவுகள் அறிவிக்கப்படும் வரை, வேலை செய்யும் மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்ணை வைத்திருக்க வேண்டும்.
காலி பணியிடங்களுக்கான விவரம்:
- மேற்பார்வையாளர், காலியிடங்கள்: 142, சம்பளம்: ரூ.35,400/- முதல் ரூ.1,12400/- , கல்வி தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும், வயது வரம்பு: 18 – 30 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
- இளநிலை உதவியாளர்,காலியிடங்கள்: 70, சம்பளம்: ரூ.19,900/- முதல் ரூ.63,200/- , கல்வி தகுதி: பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், வயது வரம்பு: 18 – 27 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
குறிப்பு: அரசு விதிகளின்படி வயது தளர்வு
விண்ணப்ப கட்டணம்: பெண்கள்/பட்டியல் இனத்தவர்/ பட்டியல் பழங்குடியினர்/ முன்னாள் ராணுவ வீரர் பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை, இதர பிரிவனருக்கு பிரிவினருக்கு – ரூ.800/-
தேர்வு முறை: எழுத்து தேர்வு, திறன் சோதனை
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப நாள் – 02.01.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி – 31.01.2025
CLICK BELOW DETAILED NOTIFICATIONS
https://www.cbse.gov.in/cbsenew/documents/Detailed_Notification_SUPDT_JA_31122024.pdf


0 Comments